For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் தொழில் துவங்குகிறார் ஸ்வராஜ் பால்

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:

கேரளத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக இங்கிலாந்தைச்சேர்ந்த பிரபல இந்தியத் தொழிலதிபர் லார்டு ஸ்வராஜ் பால் டிசம்பர் மாதம் கேரளம்வருகிறார்.

இது குறித்து கேரள தொழில்துறை அமைச்சர் சுசீலா கோபாலன் கூறியதாவது:

கேரளத்தில் முதலீடு செய்ய ஸ்வராஜ் பால் அதிக ஆர்வமாக உள்ளார். மேலும்,கேரளத்தில் முதலீடு செய்யும்படி அவருக்கு கேரள மாநில தொழில் உள்கட்டமைப்புவளர்ச்சிக் கழகம் வேண்டுகோள் விடுத்தது.

இதையடுத்து கேரளத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக வரும்டிசம்பர் மாதம் ஸ்வராஜ் பால் கேரளம் வருகிறார். இத் தகவலை அவரே தெரிவித்தார்.

தலைநகர் திருவனந்தபுரம் அல்லது கொச்சிக்கு ஸ்வராஜ் பால் வருவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. ஸ்வராஜ் பாலின் வருகை கேரள மாநிலத்துக்கு பெரும்நன்மையைத் தரும் என்று கருதுகிறோம்.

கேரளத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு குறித்த சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைகேரள அரசு கூட்டியுள்ளது. இந் நிலையில், ஸ்வராஜ் பாலின் கேரள பயணம் அமைவதுகுறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் பொருட்டு கேரள தொழில்மறுவாழ்வு நிதி வாரியம் மூலம் ரூ. 150 கோடிக்கான பங்குகளை கேரள அரசு அடுத்தமாதம் வெளியிடுகிறது.

இதன் மூலம் கிடைக்கும் நிதி, பொதுத் துறை நிறுவனங்களின் நிதி ஆதாரத்தைச்சீரமைக்கப் பயன்படுத்தப்படும். இது தவிர நேரடி அன்னிய முதலீட்டை அதிகரிக்கும்பொருட்டு பல திட்டங்களை கேரள அரசு மேற்கொண்டுள்ளது என்றார் சுசீலாகோபாலன்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X