அமெரிக்காவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை
நியூயார்க்:
அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில்புளோரிடா மாகாணத்தில் லேக்லாண்ட் என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் படேல், 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்.முதலில் நியூஜெர்சியில் குடும்பத்தினருடன் இருந்த அவர், 5 ஆண்டுகளுக்கு முன்புதான்லேக்லாண்ட் என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்தார்.
தினேஷ் பட்டேலுக்கு வர்ஷா படேல் என்ற மனைவியும், அர்சிதா (12), குஷ்பு (10), ரோஷினி (8)ஆகிய மகள்களும், சிவம் (2) என்ற மகனும் உள்ளனர்.
1994-ம் ஆண்டு முதல் லேக்லாண்டில் பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரை தினேஷ் படேல் நடத்திவருகிறார். கடைப் பக்கமே வராத வர்ஷா படேல் 1998-ம் ஆண்டுதான் கடையின் பொறுப்புக்களைகணவருடன் சேர்ந்து கவனிக்கத் தொடங்கினார்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தினேஷ் கவனித்து வந்தார். பொருட்களுக்கான பணத்தைவாங்கும் பணியை வர்ஷா படேல் கவனித்து வந்தார். வாடிக்கையாளர்களுடன் இருவரும் நல்லமுறையில் நடந்து கொண்டனர். அதனால், அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தனர்.
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கடையை இருவரும் நடத்திக் கொண்டு சென்றனர். இந் நிலையில்,புதன்கிழமை இரவு கடையை மூடும் சமயம். இரவு 9 மணிக்கு கடையின் பின் பகுதியில் தினேஷ்படேல் ஏதோ பணியில் இருந்தார்.
வர்ஷா படேல், பணப் பெட்டி அருகே உட்கார்ந்து அன்றைய தினம் வசூலான தொகையை கணக்குப்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கடைக்குப் பொருள் வாங்க வந்த நபர் தன்னிடம்இருந்த துப்பாக்கியால் வர்ஷா படேலைச் சுட்டுவிட்டு ஓடிவிட்டார்.
வர்ஷா படேல் போட்ட கூச்சலைக் கேட்டு தினேஷ் பட்டேல் ஓடிவந்து பார்த்தபோது நெஞ்சில்குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் வர்ஷா பட்டேல்.
உடனடியாக லேக்லாண்ட் மண்டல மருத்துவ மையத்துக்கு வர்ஷா படேல் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளியைத் தேடிவருகிறோம் என்று லேக்லாண்ட் போலீஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், பணத்தைக் கொள்ளையடிக்கும் முயற்சியில்வர்ஷா படேலை அடையாளம் தெரியாத அந்த நபர் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்றுகருதுவதாக போலீஸார் தெரிவித்தனர்.
6 ஆண்டுகளாக இந்த கடையை நான் நடத்தி வருகிறேன். இதுவரை வாடிக்கையாளர்களுடன் சிறுபிரச்சினை கூட ஏற்பட்டதில்லை. இச் சம்பவத்துக்கு காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.
என் மனைவி எல்லோருடனும் நன்றாகப் பழகக்கூடியவர். இப்போது நான்கு குழந்தைகளுடன்அடுத்து என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. குழந்தைகள் பேரும் சிறியவர்களாகஉள்ளனர் என்றார் தினேஷ் படேல்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications