காஷ்மீர் மோதல்:- இந்திய வீரர், 3 தீவிரவாதிகள் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பகுதியில் நடந்த பல சம்பவங்களில் பாகிஸ்தானின் மூன்று ஊடுறுவல்காரர்கள், கிராமத் தலைவர் உட்டபட 6 பேர் கொல்லப்பட்டதாக அரசு அதிகாரிகள்கூறுகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கொல்லப்பட்டார் மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
வடக்கு காஷ்மீரில் உள்ள நாவ்காம் என்ற இடத்தில் இந்திய ராணுவ நிலைகளின் மீதும்,மக்கள் வாழும் இடங்கள் மீதூம் வெள்ளிக்கிழமையன்று பாகிஸ்தான் ராணுவம் பீரங்கிமூலமும் மோர்டார் மூலமும் நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய ராணுவ வீரர்கொல்லப்பட்டார். இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
இந்தியப் படைகள் பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.அதில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் கொல்லப்பட்டனரா என்பது குறித்து தகவல்எதுவும் கிடைக்கவில்லை.
கடந்த மூன்று வருடங்களில் காஷ்மீரின் வடக்குப் பகுதியில் பாகிஸ்தான் படையினர்நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தமாதம் அக்டோபர் மாதம் 15-ம் தேதி இந்திய ராணுவத்தினர் யூரி பகுதியில்பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலை மீது நடந்த தாக்குதலை தடுக்கும்நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டுராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.பாகிஸ்தான் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதியிலிருந்து பயிற்சி பெற்ற தீவிர வாதிகளைஅதிக ஆயுதங்களுடன் விரைவில் அனுப்புவதில் குறியாக இருக்கின்றனர்.
ஏனென்றால் காஷ்மீரின் வடக்குப்பகுதியில்
தீவிரவாதிகள் ஊடுறுவப் பயன்படுத்தும பகுதி குளிர் காலத்தில் பனிப்பொழிவால்முழுவதுமாக அடைபட்டுவிடும்.
அதற்குள் அவர்கள் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப நினைப்பதால்அவர்கள் தாக்குதல் தற்போது அதிகரித்து வருகிறது என அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.
யு.என்.ஐ.