பாபர் மசூதி: பா.ஜ.கவுக்கு டெல்லி புதிய இமாம் கேள்வி
டெல்லி:
முஸ்லீம்களை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கும் பாரதீய ஜனதா சில கேள்விகளுக்கு முதலில்பதிலளிக்க வேண்டும் என டெல்லி ஜூம்மா மஸ்ஜீதின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஷாகிஇமாம் சையத் அகமத் புகாரி கூறினார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை பா.ஜ.க. பெருமையாகக் கருதுகிறதா இல்லை அதுஒரு வெட்கக்கேடான சம்பவம் எனக் கருதுகிறதா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்என்றார்.
இவரது தந்தை சையத் அப்துல்லா புகாரி தான் இதுவரை ஜூம்மா மசூதியின் தலைவராக இருந்துவந்தார். இப்போது மகன் நியமிக்கப்பட்டுள்ளாார். தலைவரான பின்னர் அவர் நிகழ்த்திய முதல்உரையைக் கேட்க 7,000 பேர் கூடியிருந்தனர். இவர் ஜூம்மா மசூதியின் 13வது ஷாகி இமாம்ஆவார். இவரது கருத்துகளுக்கு இந்திய முஸ்லீம்களிடம் ஓரளவுக்கு செல்வாக்கு இருந்து வருகிறது.
அவர் பேசுகையில், ஆட்சியைப் பிடிப்பதற்காக முஸ்லீம்களை கட்சிகள் ஓட்டு வங்கிகளாகபயன்படுத்துகின்றன. மக்களிடையே பகைமையை வளர்த்தது பா.ஜ.க. தான். இப்போது இந்தபகையை மறையச் செய்ய வேண்டிய கடமையும் பா.ஜ.கவுக்கு உள்ளது.
ஒவ்வொரு இந்திய முஸ்லீமையும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் போல சந்தேகத்துடன்பார்க்கச் செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு. மசூதிகளையும், இஸ்லாமிய கல்வி நிலையங்களையும் கூடஐ.எஸ்.ஐ. மறைவிடங்களாக பார்க்கச் செய்துள்ளார்கள்.
எங்களை அரசு தேவையில்லாமல் குறி வைக்கிறது. வாழும் நாட்டுக்கு துரோகம் செய்ய இஸ்லாம்அனுமதிக்காது. நாட்டுக்கு துரோகம் செய்பவன் இஸ்லாத்துக்கு விரோதமானவன். பாகிஸ்தான் தவறுசெய்கிறதென்றால் அதை நாங்கள் கண்டிக்கிறோம். இந்திய முஸ்லீம்களுக்கு கெட்ட பெயர் வாங்கித்தரும் பாகிஸ்தானை கண்டிக்கிறோம்.
இது தொடர்பாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிடம் பேசவும் தயாராகவே இருக்கிறேன்என்றார்.