ஓசி டீ : 2 பேரை அடித்த போலீஸ்காரர்கள் கைது
கோவை:
குடித்த டீக்கு பணம் கேட்ட டீ வியாபாரிகள் இருவரை கொடூரமாக அடித்து உதைத்த 4 ரயில்வே போலீசார்ை கைது செய்யப்பட்டனர்.
கோவை ரயில் நலையத்திற்கு எதிரே டீ கடை வைத்திருப்பவர் சந்திரன் மற்றும் இவரது மகன் ரஞ்சித். இவர்கள் இருவரும் ரயில்வேஸ்டேஷனுக்குள் டீ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இதே போன்று அக்டோபர் 19ம் தேதி மாலையில் டீ வியாபாரம் செய்ய ரயில் நிலையத்திற்குள் சென்றனர். அங்கு ரோந்து பணியில்ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படைப் போலீசார் நான்கு பேர் டீ கேட்டுள்ளனர். டீ யைப் பெற்று குடித்த பின்னர், காசுகேட்டபோது போலீசார் காசு கொடுக்க மறுத்துள்ளனர்.
ஓசி டீ வயிற்றுக்குள் சென்றவுடன் பல சட்டங்களைப் பேசினர். ரயில் நிலையத்திற்குள் நுழைய டிக்கெட் உள்ளதா எனக்கேட்டுள்ளனர். இதையடுத்து டீ விற்ற தந்தை மகனுக்கும் போலீஸ்காரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
டீ விற்க வந்த அந்த அப்பாவிகள் இரண்டு பேரையும் போலீசார் நின்றாக "கவனித்தனர். இதனால் மண்டை உடைந்த சந்திரன்,மற்றும் காயமடைந்த ரஞ்சித் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசாரிடம் இருவரும் புகார் செய்தனர். இது குறித்து உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படைப்போலீஸ் ஐ.ஜி.,திலகவதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஐ.ஜி. உடனடியாக 4 போலீசார் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவைச் சேர்ந்த ஏட்டு கனகராஜ், போலீஸ்காரர்கள் மாத்யூ செபஸ்டியன், ராதாகிருஷ்ணன்,பிரான்சிஸ் ஆகிய நான்கு பேர் மீதும் ரயில்வே போலீசரே வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இவர்கள் மேல் விசாணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications