கேரள அரசுக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம்
நாகர்கோயில்:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நிபுணர் குழு அறிக்கைகொடுத்த பின்னும் நடவடிக்கை எடுக்காத கேரள அரசுக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம்தெரிவித்துள்ளது.
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தென் மண்டல பிரதிநிதிகள் மாநாடு நாகர்கோயில்பெருமாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
தேனி, மதுரை மாவட்டங்களின் உயிர் நாடியாக இருக்கும் பெரியார் அணையைபலப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்த மத்திய அரசைபாராட்டுகிறோம்.
ஆனால் அந்த நிபுணர் குழு கொடுத்த கொடுத்த அறிக்கையின்படி அணையின்நீர்மட்டத்தை உயர்த்த சம்மதிக்க மாட்டோம் என்ற நிலையை எடுத்திருக்கும் கேரளஅரசை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, பாரதீய ஜனதா கட்சி துணைத் தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் இல. கணேசன், எச். ராஜா உள்ளிட்ட பலதலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.