டெல்லி திரும்பினார் பிரதமர் வாஜ்பாய்
டெல்லி:
மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் வாஜ்பாய்ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டெல்லி வந்து சேர்ந்தார்.
இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த அவரை குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன், குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ண காந்த்ஆகியோர் வரவேற்றனர்.
மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் காணப்பட்ட வாஜ்பாய், வரவேற்றநாராயணனுக்கும், கிருஷ்ண காந்த்துக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து நேரடியாக ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளவீட்டுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் கால் மூட்டு அறுவை சிகிச்சைசெய்து கொண்டார் பிரதமர் வாஜ்பாய். அவருக்கு அமெரிக்காவில் உள்ள இந்தியமருத்துவர் சித்தரஞ்சன் ரணவத் அறுவை சிகிச்சை செய்தார்.
கடந்த 12 நாட்களாக மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுத்து வந்த அவர்,ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டெல்லி புறப்பட்டுச் செல்வதற்கு முன் மருத்துவமனையிலேயே சக்கர நாற்காலியில்உட்கார்ந்தபடி நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
நான் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், வழக்கமான பணிகளைமேற்கொள்ளமுடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதைக் கேட்டு நான்மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சித்தரஞ்சன் ரணவத்துக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வாஜ்பாய்.
மும்பையிலிருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் வாஜ்பாய் டெல்லிபுறப்பட்டுச் சென்றார். மருத்துவமனை அருகிலும், மும்பை விமானம் நிலையம்செல்லும் வழி நெடுகிலும் மக்கள் கூடி நின்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனை அருகில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்குவாஜ்பாய்க்கு வாழ்த்துக்களும், அவர் விரைவில் குணமடையவேண்டும் என்றும்வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
அது தவிர, தபால் மூலமும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாழ்த்து அட்டைகள்வாஜ்பாய்க்கு வந்துள்ளன. அந்த வாழ்த்து அட்டைகள் அனைத்துக்கும் டெல்லிதிரும்பியவுடன் புகைப்படத்தில் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை அனுப்ப பிரதமர்முடிவு செய்துள்ளார்.
டெல்லி புறப்படும் முன், பிரீச் கேண்டி மருத்துவமனை மருத்துவர்களுக்கும்,ஊழியர்களுக்கும் வாஜ்பாய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
யு.என்.ஐ.