50 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

சென்னை:
ஜாதிக் கட்சிகளுக்கு பாரதீய ஜனதாகட்சி முக்கியத்துவம் கொடுக்காது. வரும்சட்டசபைத்தேர்தலில் ஐம்பது இடங்களில் பா.ஜ.க போட்டியிடும். என்று தமிழக பா.ஜ.கதலைவர் டாக்டர் கிருபாநிதி நிருபர்களிடம் கூறினார்.

நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய டாக்டர் கிருபாநிதி, பா.ஜ.கவின் வளர்ச்சி மகிழ்ச்சிதரும் வகையில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா தொகுதிகளிலும்போட்டியிட பா.ஜ.க தயாராக இருக்கிறது.

தமிழகத்தில் தற்பொழுதைய அரசியல் சூழ்நிலையை பார்க்கும் பொழுது தேர்தலில் அதிகஎம்.எல்.ஏக்களை பா.ஜ.க பெறும்.

தமிழகத்தில் பா.ஜ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்களில் மூன்றரைமடங்கு உயர்ந்துள்ளது. மூன்று லட்சம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 லட்சமாகஉயர்ந்துள்ளது. பிற கட்சியை சேர்ந்தவர்களும் பா.ஜ.கவில் இணைவதில் ஆர்வமாகஉள்ளனர்.

ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் தி.மு.க அரசின் செயல்பாடு சரியான பாதையில்தான்செல்கிறது. அவரை உயிருடன் மீட்க வேண்டும். தீவிரவாதத்தை பா.ஜ.க ஒரு போதும்ஆதரிக்காது. முதல் கட்டம் ராஜ்குமார் மீட்பு. அடுத்த கட்டம் தான் வேறு நடவடிக்கைகள்.

ராமதாஸ் - வாழப்பாடி மோதலால் கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை. மம்தாபானர்ஜி அரசியல்வாதி. அதனால் அவருக்கு பிரச்சனைகளின் உண்மை தெரியும்ஆனாலும், தனது மாநில மக்களை திருப்திபடுத்துவதற்காக கோரிக்கைகளை கேட்பார்.இதனால் கூட்டணியில் பிரச்சனை இல்லை.

ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது சட்டம் தன் கடமையைச் செய்துள்ளதைக்காட்டுகிறது. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேபினட் அந்தஸ்து கேட்டுவற்புறுத்தப்படும்.

வரும் தேர்தலில் பா.ஜ.க ஐம்பது இடங்களைக் கோரும். கூட்டணியில் பேசி முடிவு செய்துபோட்டியிடுவோம் என்றார் கிருபாநிதி.

பேட்டியின்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+