மில் ஊழியர்கள் போனஸ் .. உடன்பாடு ஏற்பட்டது
கோவை:
கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள 139 பஞ்சாலைகளில் போனஸ் உடன்பாடுஏற்பட்டது. அதிகபட்சமாக சுகுணா மில்ஸ் 27.5 சதவீத போனஸ் தொகைஅறிவித்துள்ளது.
கோவை, ஈரோடு மாவட்டங்களில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் போனஸ் கேட்டுப்போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ளபல மில்களில் போனஸ் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. போனஸ் அறிவிக்காதமில்கள் முன்பு அக்டோபர் 22-ம் தேதி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கோவை தொழிலாளர் நல ஆணையர் ஜெயசிங் முன்னிலையில் நடந்தமுத்தரப்புப் பேச்சுவார்த்தையில் 139 பஞ்சாலைகளில் போனஸ் உடன்பாடுஏற்பட்டது. இதில் அதிகபட்சமாக கோவையில் உள்ள சுகுணா மில்ஸ் 27. 5சதவீதம்போனஸ் அறிவித்தது. நரசிம்மா மில்ஸ் 26. 5 சதவீதம், லட்சுமி மில்ஸ் 8.33 சதவீதம்போனஸ் அறிவித்துள்ளன.
இன்ஜினியரிங் தொழிற்சாலைகளில் 39 தொழிற்சாலைகள் போனஸ் அறிவித்துள்ளன.இதில், விஜயகுமார் போர்ஜிங் மில்ஸ் நிறுவனம் 38 சதவீதம் போனஸ்அறிவித்துள்ளது. டெக்ஸ்மோ, அக்குவா பம்ப்ஸ் ஆகியவை 36 சதவீதமும், பிரிகால்20 சதவீதமும் போனஸ் அளிக்க உடன்பாடு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications