For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடி போதையில் மனைவி கொலை .. கணவன் தலைமறைவு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

திருப்பூர் அருகே இரண்டாவது மனைவியைக் கொலை செய்தவரைப் போலீசார் தேடிவருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள இருட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ்(45). இவர் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராகப் பணியாற்றி வருகின்றார். இவருக்குஇரண்டு மனைவிகள் உண்டு.

இரண்டாவது மனைவி புஷ்பா (38), திருப்பூரில் குடியிருந்து வந்தார். பெருமாநல்லூர்என்ற இடத்தில் பெட்டிக் கடை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்தார். இங்கு நடராஜன்வாரம் ஒரு முறை வந்து மனைவியைச் சந்தித்து விட்டுச் செல்வார்.

வழக்கம்போல, நடராஜன் வார இறுதியில் இரண்டாவது மனைவியைச் சந்திக்கவந்தார். அப்போது குடிபோதையில் இருந்துள்ளார். மனைவி புஷ்பாவுடன், தகாராறுசெய்துள்ளார்.

அவரது நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உருட்டுக் கட்டையால் தாக்கினார்.இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த புஷ்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுசிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X