மணமகனை அடித்த முன்னாள் அமைச்சரின் மகன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெண்களை கேலிசெய்ததால் தன்னை கண்டித்த மணமகனை தாக்கிய முன்னாள் அமைச்சர்எஸ்.டி.சோமசுந்தரத்தின் மகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், ஞாயிற்றுக்கிழமை திருமண விருந்துநடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு முன்னாள் அமைச்சர் எஸ்.டி சோமசுந்தரத்தின் மகன்செல்வமும் (22) அவரது நண்பர்களும் திருமண விருந்து நடந்த அறைக்கு அடுத்தஅறையில் மது அருந்தி திருமணத்திற்கு வந்த பெண்களை கேலி செய்து கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் செல்வத்தையும் அவரது நண்பர்களையும் கண்டித்தனர்.ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்வமும் அவரது நண்பர்களும் பெண்களை கேலிசெய்துள்ளனர்.

மணமகன் தனது நண்பர்களுடன் சென்று செல்வத்தையும் அவரது நண்பர்களையும்கோபத்துடன் கண்டித்தார். பெண்கள் மத்தியில் தன்னை அவமானப்படுத்திவிட்டதால்கோபமடைந்த செல்வம் மணமகனின் நண்பர்களை தாக்கினார். மணமகனை பீர் பாட்டிலால்தாக்கினார். இதில் மணமகன் காயமடைந்தார்.

தகவல் அறிந்த போலீசார் செல்வத்தையும் அவரது நண்பர்களயும் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+