அஸ்ஸாமில் உல்பா தீவிரவாதிகள் அட்டூழியம்: 16 பேர் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி:

அஸ்ஸாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர்இறந்தனர். 10 பேருக்கு மேல் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவங்கள் நடந்தன.

மேற்கு அஸ்ஸாமில் துலியாஜின் என்ற இடத்தில் 4 பேரையும் துலியாஜினிலிருந்து 30கிலோமீட்டர் தொலைவில் மேலும் 11 பேரையும் அவர்கள் சுட்டுக் கொன்றனர்.

சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இரு சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன. இச்சம்பவங்களில் 10 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

துலியாஜின் என்ற இடத்தில் நாவோஹோலோயா என்ற மார்க்கெட்டுக்குள்துப்பாக்கியுடன் புகுந்த 4 தீவிரவாதிகள், அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாகச்சுட்டனர். இதில் 3 வயது சிறுவன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

அதே போல் காகோஜான் என்ற இடத்தில் உள்ள மார்க்கெட்டுக்குள் நுழைந்த 10 பேர்கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டு 11 பேரைக் கொலை செய்தனர். இருசம்பவங்களிலும் ஈடுபட்ட தீவிரவாதிகள் பிடிபடாமல் தப்பியோடிவிட்டனர்.

திப்ருகர் மாவட்டத்தில் பணம் கொடுக்க மறுத்த தொழிலதிபரையும் உல்பாதீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

சம்பவ இடங்களுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணைமேற்கொண்டனர். தீவிரவாதிகளைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சம்பவ இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ் விருசம்பவங்களுக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகபோலீஸார் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+