கணவன் இறந்ததால் மனைவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை:

ரயிலில் அடிபட்டு கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி, கிணற்றில் குதித்துதற்கொலை சய்து கொண்டார்.

திருமணமான நான்கு மாதத்திலேயே இந்த சம்பவம் நடந்ததால் வருவாய்த் துறைஅதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை பீளமேட்டைச் சேர்ந்தவர் கனகராஜ் (28). இவர் இந்தப் பகுதியில் உள்ள ஒருபஞ்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கும், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளஜோதிபுரத்தைச் சேர்ந்த சுதா (24) என்பவருக்கும் கடந்த நான்கு மாதத்திற்கு முன்புதிருமணம் நடந்தது.

சுதா, கணபதியில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிவந்தார்.

சில நாட்களுக்கு முன்பு சுதா, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர்தங்கியிருந்தார். அப்போது கனகராஜ், ரயிலில் அடிபட்டு ஆவரம்பாளையம் அருகேஇறந்து போனார். கனகராஜ், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி ரயிலில்அடிபட்டு இறந்து போனாரா என்பது பற்றிய தகவல் இல்லை.

கனகராஜ் இறந்து போன தகவல் சுதாவின் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேள்விப்பட்ட சுதா, அருகில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இந்த சம்பவம் நடந்ததால், ஆர்.டி.ஓவின் (வருவாய்த் துறை அதிகாரி) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+