ராமதாசுக்கு வக்காலத்து வாங்கும் மேதாவிகள் .. பாய்கிறது த.ரா.கா.
சென்னை:
ஜாார்கண்ட் முக்தி மோர்ச்சா வழக்கு மாதிரி, புதிதாக தமிழகத்தில் லஞ்ச வழக்கு தலைதூக்கியுள்ளது.
வாழப்பாடி ராமூர்த்திக்கும், ராமதாசுக்கும் இடையிலான மோதல் இப்பொழுது புதியகோணத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது எங்கள் கட்சிலிருந்து எவ்வளவு பெற்றார்என்பதை தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம் என்பதைடாக்டர் ராமதாசுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விடும் மேதாவிகளுக்குதெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக ராஜீவ் காங்கிரஸ் துணைத் தலைவரும், செய்தித்தொடர்பாளருமான பேராசிரியர் தி.சு.கிள்ளிவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில், எங்கள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர்ராமதாஸ் பற்றி இதுவரை சொல்லிவந்த பல புகார்களுக்கு கண்டனம் தெரிவித்துஅந்தக் கட்சியின் தலைவரும் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணி. இணைப்பொதுச் செயலாளர் பு.தா. இளங்கோவன் எம்.பி. ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளனர்.
வாழப்பாடி ராமமூர்த்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்லமுடியாமல் சுற்றி வளைத்து பிரச்னையை திசை திருப்பும் வகையில் ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளார்கள்.
வாழப்பாடி ராமமூர்த்தியின் குற்றச்சாட்டு 2.5 கோடி ரூபாய் வாங்கினார் என்பது.அதற்கு உண்டு இல்லை என்று பதில் சொல்லாமல் கண்டனம் என்ற பெயரில் அறிக்கைவெளியிட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, இந்த அறிக்கைவிடும் மேதாவிகள்எங்களிடம் இருந்து பெற்றது எவ்வளவு என்பதை அதற்கு உண்டான ஆதாரங்களுடன்நிரூபிக்க நாங்கள் தயாராகவே உள்ளோம்.
டாக்டர் ராமதாசுக்கு கொஞ்சமேனும் மனசாட்சி இருக்குமானால் இது போன்றஅறிக்கைகள் விடுவதற்கு அனுமதிக்க மாட்டார். அறிக்கை விட்டவர் மனசாட்சிஇல்லாததன் காரணமாக இப்படி ஒரு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பணம் பெறவில்லை என்று அவர் ஒரு பொழுதும் சொல்லவில்லை. சொல்லவும்முடியாது. அறிக்கை விடுபவர்கள் இதன் ரகசியத்தை உணர வேண்டும்.
கட்சிகள் சார்பில் கொடுத்ததை ராமதாஸ் மறுப்பாரேயானால் எல்லாவிதவிசாரணைக்கும் அவரும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் தயார்தானே?என்று கேட்க விரும்புகிறேன் என்று கிள்ளிவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்