"பைல் பார்க்கத் தொடங்கினார் வாஜ்பாய்
டெல்லி:
மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பியுள்ள பிரதமர் வாஜ்பாய்,திங்கள்கிழமை முதல் தனது வழக்கமான பணிகளைப் பார்க்கத் துவங்கினார்.
மும்பை பிரீச் கன்டி மருத்துவமனையில், வாஜ்பாய்க்கு மூட்டு மாற்று அறுவைச்சிகிச்சை நடந்தது. ஞாயிற்றுக்கிழமை அவர் டெல்லி திரும்பினார். 15 நாட்களாகமும்பையில் இருந்த அவர் தற்போது வீட்டிலிருந்தபடியே பைல்களைப் பார்க்கத்துவங்கியுள்ளார்.
பிரதமரின் பத்திரிகை ஆலோசகர் எச்.கே.துவா இதுகுறித்துக் கூறுகையில், பிரதமர்மீண்டும் பணியில் ஈடுபடத் துவங்கியுள்ளார். பைல்கள் குவிந்து கிடக்கின்றன.அலுவலகத்திற்கு அவர் போகவில்லை. இருப்பினும் வீட்டில் இருந்தபடியேஅவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
வீல் சேரில்தான் தற்போது வாஜ்பாய் இருக்கிறார். அவ்வப்போது டாக்டர்கள்ஆலோசனைப்படி வாக்கர் கருவியின் உதவியுடன் நடக்கப் பழகுகிறார் என்றார் துவா.
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி திங்கள்கிழமை பிரதமரைச்சந்தித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications