தமிழக, கர்நாடக அரசுகள் வீரப்பனைப் பிடிக்கத் தவறி விட்டன .. ஆர்.வி.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜ்குமார் கடத்தப்படும் முன்பே நடவடிக்கை எடுத்து வீரப்பனைப் பிடிக்க தமிழக,கர்நாடக அரசுகள் தவறிவிட்டன என முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன்தெரிவித்துள்ளார்.

சென்னையில் காந்தி கல்வி நிலைய விழாவில் ஜனாதிபதி வெங்கட்ராமன் கலந்துகொண்டார். விழாவல் பங்கேற்றபின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தபேட்டியில் அவர் கூறியதாவது:

கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தும் முன்பே தமிழக, கர்ாநாடக அரசுகள் அதிரடிநடவடிக்கை மூலம் வீரப்பனை பிடித்திருக்க வேண்டும். ஆனால் இரு அரசுகளும் அதுபோன்ற நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டன.

இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால், இப்போது ராஜ்குமாரின் உயிர்வீரப்பன் கையில் இருக்கிறது.

தமிழகத்தில் ஜாதிக்கட்சிகள் புதிதாக உருவாகி வருகின்றன. மக்கள் இத்தகைய கட்சிகளைபுறக்கணிக்க வேண்டும். அந்தக் கட்சிகளுக்கு மக்கள் ஓட்டளிக்காவிட்டால் அந்தக் கட்சிகள்காணாமல் போய்விடும்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு எம்.பி.களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறைதண்டனை கிடைத்துள்ளது. இது சட்டப்படி நடந்துள்ளது, இது பற்றி மேலும் சொல்வதற்குஏதும் இல்லை. என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+