நரசிம்மராவ் அப்பீல் மனு ஏற்பு
டெல்லி:
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தனக்கு அளிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்துதாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
முன்னாள் பிரதமர் தான் பதவியில் இருந்த போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில்வெற்றி பெற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகசுமத்தப்பட்ட வழக்கில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கும் முன்னாள்மத்திய மந்திரி பூட்டா சிங்குக்கும் 3 ஆண்டு கால கடுங்காவல் தண்டனைஅளிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து நரசிம்மராவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைநீதிபதி சோடி ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 7-ம் தேதிக்குஒத்தி வைத்தார்.
நரசிம்மராவின் வக்கீல் ஆனந்த், ஜார்கண்ட் முக்தி மோர்சாவைச் சேர்ந்த சைலேந்திரமகாத்தோவை அரசியல் சட்ப்பிரிவு 105-ன் கீழ் அப்ரூவராக ஏற்கக் கூடாது.ஏனென்றால் அவர் முன்னுக்குப் பின் முரணாக வாக்கு மூலம் அளிக்கிறார் எனகேட்டுக் கொண்டார்
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications