கோவா முதல்வர் பதவி விலகினார்: பா.ஜ.க. ஆட்சியமைக்கிறது
பனாஜி:
கோவா முதல்வர் பிரான்சிஸ்கோ சர்டின்ஹோ, செவ்வாய்க்கிழமை தனது முதல்வர்பதவியை ராஜினாமா செய்தார்.
சில தினங்களுக்கு முன்பு கோவா காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து 4 அமைச்சர்கள்விலகினர். தனிப் பிரிவாக சட்டசபையில் செயல்படப் போவதாக கூறினர்.இதையடுத்து முதல்வர் சர்டின்ஹோ தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடிஏற்பட்டது.
நான்கு அமைச்சர்கள் பதவி விலகியதையடுத்து செவ்வாய்க்கிழமை சட்டசபையில்நம்பிக்கை வாக்கு கோர முதல்வர் சர்டின்ஹோ முடிவு செய்திருந்தார். இந்தச்சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கு கோருவதற்கு முன்பே தனது முதல்வர் பதவியைராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்வது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது அரசுபெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. எனவே முதல்வர் பதவியை ராஜினாமாசெய்கிறேன் என்றார்.
பின்னர் சர்டின்ஹோ தனது அமைச்சர்களுடன் ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநர்முகம்மது பசலிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
காங்கிரஸ் அரசு பதவி விலகி விட்டதால், அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன்பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியமைக்க உள்ளது.
யு.என்.ஐ.