காவிரியில் மீண்டும் வெள்ள அபாயம்
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், நிரம்பி வழிந்தது.எப்போதும் இல்லாத அளவிற்கு விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீருக்கும்மேலாக நீர் வரத்து இருந்தது.
இந்த தண்ணீர் அளவு குறைந்து கடந்த 22ம் தேதி மாலை விநாடிக்கு 29 ஆயிரத்து 303கன அடி தண்ணீராக இருந்து வந்தது. இந்நிலையில் திடீரென 23ம் தேதி காலை முதல்அதிகரித்தது.
அணைக்கு நீர் வரத்து தற்போது 72 ஆயிரத்து 851 கன அடி தண்ணீராக இருந்துவருகிறது.
அணையின் நீர்மட்டம் தற்போது 120.97 அடியாக இருந்து வருகிறது. அணைக்குக்கூடுதல் நீர் வரத்து இருப்பதால், விநாடிக்கு 45 ஆயிரத்து 958 கன அடி தண்ணீர் வீதம்திறந்து விடப்படுகிறது. தற்போது வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்தால் மீண்டும்காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.












Click it and Unblock the Notifications