மழையை ரசித்தவர் மின்னல் தாக்கி சாவு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் அருகே மின்னல் தாக்கி ஒருவர் இறந்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்தவர்மாணிக்கம். இவர் வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது பலத்த மழை பெய்யத்தொடங்கியது.
மழையை பார்த்து ரசித்தவாரு அமர்ந்திருந்த அவருக்கு அருகில் இருந்த தென்னைமரத்தில் இடி விழுந்தது. அப்போது மாணிக்கம் மீது மின்னல் தாக்கியது.
இதில் மாணிக்கம் உடல் கருகி இறந்தார். அவரது உடல், மருத்துவ பரிசோதனைக்காகசேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications