சென்னை போலீஸாருக்கு தைவான் "கூலிங் கிளாஸ்
சென்னை:
வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க, சென்னை நகர போக்குவரத்து பிரிவு போலீசார் 2 ஆயிரம் பேருக்குதைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கூலிங் கிளாஸ் (மூக்கு கண்ணாடி) வழங்கப்பட்டது.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தக் கண்ணாடிகளை வழங்கியது.
இதற்கான நிகழ்ச்சிக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தலைவர் கே.என்.பண்டாரி தலைமை வகித்தார். நகரபோலீஸ் கமிஷனர் காளிமுத்துவுக்கும் ஒரு கூலிங் கிளாஸை அணிவித்தார் பண்டாரி.
பின்னர் காளிமுத்து கூறுகையில், சமீபத்தில் தான் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு சுவாச கவசம்வழங்கப்பட்டது. தற்போது கூலிங் கிளாஸ். அடுத்து அவர்களுக்கு மழைக் கோட்டு வழங்க ரோட்டரி சங்கங்கள்முன் வந்துள்ளன என்றார்.
நிகழ்ச்சியில், 2 ஆயிரம் டிராபிக் போலீசாரும் கூலிங் கிளாஸ் அணிந்த நிலையில் போட்டோவுக்கு போஸ்கொடுத்தனர்.
சென்னை நகர போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாரின் பணிகளை பாராட்டினர்.












Click it and Unblock the Notifications