1200 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி ஸ்வீட்
சென்னை:
1200 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆளுநரின் ஆணைப்படி தீபாவளி இனிப்புகளை தமிழக அரசு வழங்கியது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
தமிழக அரசு ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்றோருக்கு பல்வேறு மறுவாழ்வுத் திட்டங்களையும், சமூக நலத்திட்டங்களையும் திறம்பட செயல்படுத்தி வருகிறது.
ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின்பால் மாநில அரசு கொண்டுள்ள பரிவு, பாசத்தைவெளிப்படுத்தும் வண்ணம், தமிழக கவர்னரால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுஇனிப்பு மற்றும் காரப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த புத்தாயிரத்து ஆண்டிலும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அரசால் நடத்தப்படும்ஊனற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சேவை இல்லத்தை சேர்ந்த 1200குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் காரப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்று அரசு தெரிவித்துள்ளது.