அமைதித் தீர்வு காணுங்கள்: இலங்கைத் தமிழ் கட்சி கோரிக்கை
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண நடவடிக்கையில் ஈடுபடுமாறுஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி(டி.யு.எல்.எப்.) கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் துணைத் தலைவர் வி. ஆனந்தசானாகரி எம்.பி.வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இலங்கையில் ஆளும் கட்சியாக மக்கள் கூட்டணியும், முக்கிய எதிர்க்கட்சியானஐக்கிய தேசிய கட்சியும் உள்ளன. ஆனால், அவை செயல்படும் விதம் திருப்திகரமாகஇல்லை.
மிகச் சிறிய, முக்கியமில்லாத விஷயங்களுக்கு அவை அதிக முக்கியத்துவம்தருகின்றன. 18 ஆண்டுகளாக இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல்உள்ளது.
உபயோகமில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதை விடுத்து இலங்கைஇனப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டிய முயற்சிகளை ஆளும்கட்சியும், எதிர்க்கட்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண, நாட்டில் உள்ள அனைத்து அரசியல்கட்சிகளும் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்து ஒருமித்த தீர்வைக் காணவேண்டும்.மேலும், அந்த முடிவால் நீண்ட காலமாக இலங்கையில் வசித்தும வரும் தமிழர்களுக்குஎந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றார் அவர்.
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இருவரின் உடல் கண்டுபிடிப்பு:
இதற்கிடையே விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இலங்கை விமானப்படைஹெலிகாப்டரில் பயணம் செய்த இருவருடன் சடலங்களும் செவ்வாய்க்கிழமை காலைகண்டுபிடிக்கப்பட்டன.
திரிகோணமலை கடற்படை தளத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள் உப்ராகடலில் அந்த ஹெலிகாப்டரை புலிகள் திங்கள்கிழமை சுட்டு வீழ்த்தினர். இவ் விபத்தில்இறந்த மேலும் இருவரின் சடலங்களைத் தேடும் பணியில் ராணுவத்தினர்ஈடுபட்டுள்ளனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications