மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் .. 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
உடுமலைப்பேட்டை:
கோவை அருகே உடுமலையில் இருவர் உயிருடன் புதையுண்ட சம்பவத்தில்,மிராசுதாரர்கள் இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டையில் தளி என்ற ஊரில், வயல் தோட்டத்தில்பி.ஏ.பி. வாய்க்காலிலிருந்து தண்ணீர் எடுக்க இருவர் குழி தோண்டிக்கொண்டிருந்தனர்.
வளாவாடியைச் சேர்ந்த செல்வராஜ், புதுப்பட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் ஆகிய இந்தஇருவரும் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து உயிருடன்புதையுண்டு இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இப்போது, சட்டத்திற்குப் புறம்பாக பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் எடுக்கத்தோண்டப்பட்ட இந்தப் பள்ளத்தில் இருவர் இறந்து போனது தொடர்பாக ராசாக்கவுண்டர் மற்றும் கருப்புசாமி ஆகியோரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications