ரூ. 2 கோடி விவகாரம்: ராமதாஸ், வாழப்பாடிக்கு நோட்டீஸ்
சென்னை:
மக்களவை தேர்தலில் 3 தொகுதிகளை ஒதுக்குவதற்காக பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாசுக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக ராஜீவ் காங்கிரஸ்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியிருப்பது குறித்து தொடர்பாக தொடரப்பட்டவழக்கில், இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமதாசுக்கு, வாழப்பாடி ராமமூர்த்தி பணம் கொடுத்தது தொடர்பான புகார் குறித்துசி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி வரதராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்,வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தவாழப்பாடி ராமமூர்த்தி, கடந்த மக்களவை தேர்தலில் எங்களுக்கு 3 தொகுதிகளைதருவதற்காக ராமதாசுக்கு ரூ.2.5 கோடி கொடுத்தோம். அதை உடனடியாக ராமதாஸ்திருப்பித் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரை பா.ம.க. கடுமையாக மறுத்தது. இந்நிலையில் இதுகுறித்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வரதராஜன் என்பவர்மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதிகள் ஜெயசிம்மபாபு, ஏ.கே.ராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஏற்றனர்.இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி ராமதாஸ், வாழப்பாடி, சி.பி.ஐமற்றும் வருமான வரித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications