2 பஸ்கள் மோதியதில் 6 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
நாமக்கல் அருகே இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 6 பேர்இறந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ராசிபுரத்திலிருந்து ஒரு பஸ் அக்டோபர் 26ம் தேதி நாமக்கல்நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது நாமக்கல்லிலிருந்து ராசிரம் நோக்கி ஒருபஸ் சென்று கொண்டிருந்தது.
இரண்டு பஸ்களும் தம்மம்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில்,ராசிபுரத்தைச் சேர்ந்த டிரைவர் மணி (40), மகேஸ்வரி (40), வேம்பு (52), மும்தாஜ்பேகம் (34), பழனி (58), சின்னத்தம்பி (28) ஆகிய 6 பேரும் இறந்தனர்.
36 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் துறையூர் அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications