கோவை சிறையில் கைதிகள் கைகலப்பு
கோவை:
கோவை மத்திய சிறையில் தொழுகையின் போது முஸ்லீம் கைதிகளுக்கிடையே நடந்தமோதலில் ஒருவர் காயமடைந்தார். போலீசார் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்குக்கொண்டு வந்தனர்.
கோவை மத்திய சிறையில், கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதிகள்அடைக்கப்பட்டுள்ளனர். கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையைவிரைவில் துவக்க வசதியாக சென்னை, திருச்சி, சேலம் சிறைகளில்அடைக்கப்பட்டிருந்த இந்தக் கைதிகள் கோவை சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
கோவை சிறையில் உள்ள168 கைதிகளும் கூட்டுத் தொழுகை நடத்த அனுமதிபெற்றிருந்தனர். இவர்களில் ரியாஸ் ரஹ்மான் மற்றும் ஊமைபாபு ஆகிய இருவரும்வழக்கில் அப்ரூவராக மாறியுள்ளனர். எனவே இவர்கள் இருவரும் தனியாகநீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு வருகின்றனர்.
பாவா என்ற கைதி இவர்களை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இதையடுத்துபாவாவை மற்ற குண்டு வெடிப்பு கைதிகள் கண்டித்துள்ளனர். ஆனால், இதனைபொருட்படுத்தாமல் பாவா தொடர்ந்து பேசியதால், மற்ற கைதிகள் சந்தேகம்கொண்டனர். எனவே, தொழுகையை முடித்தவுடன் கலைந்து செல்லும் போது கூட்டாகசேர்ந்து இவர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தலையிட்டு பாவாவைக்காப்பற்றினர்.












Click it and Unblock the Notifications