சென்னையில் விளையாட்டு வீரர் படுகொலை
சென்னை:
சென்னையில் கூடைப்பந்து விளையாட்டு வீரர் நித்யானந்த் ஆயுதம் தாங்கிய கும்பல்ஒன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை அருகே செய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யானந்த் (33). கூடைபந்து வீரர்.சென்னை மாவட்டம் மற்றும் தனியார் கிளப்புகளுக்காக போட்டிகளில்பங்கேற்றுள்ளார். சென்னை ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியின் கூடைப்பந்து அணிபயிற்சியாளராகவும் இருந்து வந்தார். அவரது தந்தை நடத்தி வந்த பால் விற்கும்தொழிலும் உதவியாக இருந்தார்.
சென்னைக்கு வந்தால் விரைவில் முன்னேறலாம் என்பதால் சமீபத்தில் சென்னை,மாம்பம் பகுதியில் குடியேறினார். கண்ணம்மாபேட்டை பகுதியில் அவர் வீடு பிடித்துத்தங்கியிருந்தார்.
ஒரு வாரத்திற்கு முன்பு நித்யானந்திற்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையேதெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்துபக்கத்து வீட்டுக்காரரான அப்புக் குட்டி மீது போலீஸில் புகார் கொடுத்திருந்தார்நித்யானந்த்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் நித்யானந்த்பிணமாகக் கிடந்தார். அவரது உடலில் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன.
நித்யானந்த் கொலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications