தீபாவளிக்கு சேலை இல்லை.. பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தீபாவளிக்குக் கணவர் துணி வாங்கித் தராததால், கோபமடைந்த பெண், தனது நான்குகுழந்தைகளுக்குத் தீவைத்து விட்டு தானும் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். இதில் இரண்டு குழந்தைகள் கருகி இறந்தன.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது வலையங்குளம். இந்த ஊரைச்சேர்ந்தவர் லட்சுமி (32). இவரது கணவர் மாயகிருஷ்ணன், போலீஸ் கான்ஸ்டபிள்.தீபாவளிக்கு லட்சுமிக்கு, மாயகிருஷ்ணன் துணி வாங்கித் தரவில்லை என்று தெரிகிறது.இதனால் லட்சுமி வருத்தமடைந்தார்.

வியாழக்கிழமை இரவு திருமங்கலத்திலிருந்து, தனது கணவரின் ஊரானவலையங்குளத்திற்குச் சென்றார். தன்னுடன் தனது குழந்தைகள் நால்வரையும் கூட்டிச்சென்றார். அங்கு மாயகிருஷ்ணன் வீட்டுக்கு வந்த பின் குழந்தைகள் நான்கு பேர் மீதும்கெரசின் ஊற்றித் தீவைத்தார். பின்னர் தானும் தீவைத்துக் கொண்டார்.

இந்த கொடூர சம்பவத்தில் லட்சுமியும், அவரது ஒன்றரை வயது மகள் மீனாவும் சம்பவஇடத்திலேயே இறந்தனர். 2 வயது மகன் பழனி முருகன் திருமங்கலம் அரசுமருத்துவனையில் இறந்தான். மகள் துர்கா தேவி (6), மகன் சரவண பெருமாள் (4)ஆகியோர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளிக்குடி போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சம்பவம் நடந்தபோது, கான்ஸ்டபிள் மாயகிருஷ்ணன் திருமங்கலத்தில்தான் இருந்தார்என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+