பாண்டி.யில் வன்னியர், தலித் மோதல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தலித் பிரிவினருக்கும், வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும்இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.
பாண்டிச்சேரி அருகே உள்ள கிருமாம்பாக்கம் என்ற இடத்தில் வியாழக்கிழமை இரவுஇந்த சம்பவம் நடந்தது.
கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு தலித் இளைஞர் குடிபோதையில் வந்துகொண்டிருந்தார். அப்போது காலி மது பாட்டில்களை சாலையில் போட்டுஉடைத்துள்ளார். அது வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மீது பட்டுள்ளதாகத்தெரிகிறது. இதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அங்குகூடியவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தனது பகுதிக்குச் சென்ற அந்த தலித் இளைஞர், தன்னை வன்னிய சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் மிரட்டியதாக தனது பகுதி மக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து தலித்பிரிவினர், பெரும் கூட்டமாக கிளம்பி வன்னியர் சமுதாயத்தினர் வசித்த வீடுகளைத்தாக்கினர். அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் தீவைக்கப்பட்டன.
இதையடுத்து வன்னியர்கள் பதில் தாக்குதலுக்குத் திரண்டனர். ஒரு டெலிபோன் பூத்மற்றும் கடையை தாக்கினர். உடனடியாக போலீசுக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார்விரைந்து வந்து கும்பலைக் கலைத்தனர். மோதல் தொடர்பாக சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
தற்போது அந்தப் பகுதியில் அமைதி நிலவுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications