லாரி, வேன் மோதலில் 5 பேர் சாவு
கோவை:
திருப்பூர் அருகே திருப்பதி சென்று திரும்பி வந்த வேன் மீது லாரி மோதியதில் புது மணத் தம்பதிகள் உட்பட 5 பேர்இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர் அருகே உள்ள கே. செட்டிபாளையத்தில் சூர்யா பேப்ரிக்ஸ் என்ற பனியன் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்த தொழிற்சாலையில் தீபாவளி விடுமுறை விடப்பட்டது. இதனையடுத்து இதில் பணியாற்றி வந்ததொழிலாளர்கள் திருப்பதி செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து திருப்பூரிலிருந்து வேன் ஒன்றில் புறப்பட்டனர். திருப்பதி சென்று சாமி தரிசனம் முடிந்ததும், வேனில்திரும்பினர். அதிகாலையில் திருப்பூர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த லாரிவேன் மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் இறந்தனர்.
இந்த விபத்தில், பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போர்மேன் ராஜன் (28), ஜெயலட்சுமி (32), கீதா(26) ஆகியோர் இறந்தனர். புதுமணத் தம்பதிகளான ரவிக்குமார், சகிஜாவும் இறந்தனர்.
வேனில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.
அதிகாலையில் நடந்த இந்த விபத்தால், அந்தப் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நாமக்கல்லைச் சேர்ந்த லாரி டிரைவர் மணிவண்ணன், சரவணன் ஆகியஇரண்டு பேரையும் கைது செய்தனர்.