For Daily Alerts
Just In
நாதஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.சேதுராமன் மரணம்
மதுரை:
பிரபல நாதஸ்வர கலைஞரும், கலைமாமணி விருது பெற்றவருமானஎம்.பி.என்.சேதுராமன் (67) மதுரையில், வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.
பிரபல நாதஸ்வரக் கலைஞரான எம்.பி.என்.பொன்னுச்சாமியின் சகோதரர் சேதுராமன்.எம்.பி.என். சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட இருவரும், தமிழகம் மட்டுமல்லாதுவெளிநாடுகளிலும் கூட தங்களது நாதஸ்ரவத் திறமையால் அறியப்பட்டவர்கள.
ஒரு மாதத்திற்கு முன்பு சேதுராமனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்துமதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனளிக்காது வெள்ளிக்கிழமை காலை அவர் மரணமடைந்தார்.சேதுராமனுக்கு மனைவி, ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.
சிங்கப்பூர் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சேதுராமன் பயணம்மேற்கொண்டுள்ளார்.
Comments
Story first published: Friday, October 27, 2000, 5:30 [IST]