நரேன் கார்த்திகேயனுடன் கார்லின் மோட்டார் ஸ்போர்ட் ஒப்பந்தம்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த இந்தியாவின் பிரபல கார் ரேஸ் வீரரான நரேன்கார்த்திகேயனுடன், கார்லின் மோட்டார்ஸ்போர்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
மக்காவ் நகரில் நடக்கவுள்ள பார்முலா 3 போட்டி மற்றும் நவம்பர் மாதம் நடக்கவுள்ளகொரிய கிரான்ட் பிரீ போட்டி ஆகியவற்றில், கார்லின் நிறுவனம் சார்பில் நரேன்கார்த்திகேயன் பங்கேற்பார்.
மக்காவ் சாம்பியன் போட்டி 1954-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இப் போட்டியைகார்லின் நிறுவனமே நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் பார்முலா1போட்டிகளுக்குப் பிறகு அதிக முக்கியத்துவம் உள்ள போட்டி இது என்பதுகுறிப்பிடத்தக்கது. மொத்தம் 31 கார்கள் இப்போட்டியில் கலந்து கொள்கின்றன.
மைக்கோல் சூமேக்கர், மைகா ஹக்கினன், டேவிட் கோல்ட்ஹாட் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற பிரபல டிரைவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
கார்லின் நிறுவனமும், நரேன் கார்த்திகேயனும் 1999-ம் ஆண்டு முதல் ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளனர். கார்லின் நிறுவனத்திற்காக கலந்து கொண்ட போட்டிகள்அனைத்திலும் கார்த்திகேயன் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.