For Daily Alerts
Just In
பாண்டி.யில் பைப் குண்டு வெடித்து ஆட்டோ நாசம்
பாண்டிச்சேரி:
கம்ப்யூட்டர்களைத் திருடிச் சென்ற 2 பேர், தற்காப்புக்காக கொண்டு சென்ற பைப்வெடிகுண்டு வெடித்ததில், ஆடடோ ரிக்ஷா கருகியது.
பாண்டிச்சேரி வ.உ.சி. அரசு உயர் நிலைப் பள்ளியில் இருந்த ஐந்து கம்ப்யூட்டர்களை 2பேர் திருடினர். பின்னர் இவற்றை ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் வைத்து தங்களதுஇருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.
நான்கு கம்ப்யூட்டர்களை ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் வைத்துக் கொண்டு சென்றனர்.இன்னொரு கம்ப்யூட்டரை மற்றொரு ஆட்டோவில் வைத்து எடுத்துச் சென்றனர்.தற்காப்புக்காக பையில் பைப் வெடிகுண்டுகளை வைத்திருந்தனர்.
ஆட்டோ வேகமாக சென்றபோது, சாலையில் இருந்த ஸ்பீட் பிரேக்கரில் மோதியது.அப்போது, பைப் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஆட்டோ தீப் பற்றிக் கருகியது.
விசாரணையில் தாங்கள் பைப் வெடிகுண்டுகளைக் கொண்டு சென்றதை இருஇளைஞர்களும் ஒப்புக் கொண்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, October 27, 2000, 5:30 [IST]