இலங்கைத் தமிழர்கள் படுகொலை .. கம்யூ. கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கையில் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 27 இலங்கைத் தமிழர்கள்சிங்களர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மத்திய பகுதியில் பண்டாரவேலாவில் மறுவாழ்வு முகாம் உள்ளது.இங்கு இலங்கைத் தமிழர்கள் பலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சில நாட்களுக்கு முன்இந்த முகாமுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த சிங்களர்கள் சிலர், அங்கிருந்த 27இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர்.

இந்த படுகொலைக்கு பல உலக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடுமையானகண்டனத்தைத் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடுபிரிவும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் மனித உயிர்களுக்கு எந்த மரியாதையும், மதிப்பும் இல்லைஎன்பதைத்தான் இப் படுகொலைகள் காட்டுகின்றன. மேலும், இலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்படுகின்றன என்பதையும் காட்டுகின்றன என்று கூட்டத்தில் பேசியதலைவர்கள் பேசினர்.

இலங்கையில் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல்தடுக்க அதிபர் சந்திரிகா குமாரதுங்கா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் என். சங்கரய்யாதெரிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+