எம்.ஜி.ஆர். சிலையை திறக்கிறார் கருணாநிதி
சென்னை:
எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எம்ஜிஆருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. அந்த சிலையை முதல்வர் கருணாநிதி ஜனவரி20-ம் தேதி திறந்து வைக்கிறார் என்று அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செவ்வாய் கிழமை அவர் அளித்த பேட்டி:
எம்ஜிஆர் அதிமுக மாநில மாநாடு மதுரையில் ஜனவரி 30 ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி மாபெரும் பேரணி, பொதுக் கூட்டம்நடத்தப்படும்.
இம்மாநாட்டிற்கு வரும்படி பிரதமர் வாஜ்பாய்க்கு அழைப்பு வி டுத்துள்ளேன். அவர் வருவது உறுதியாகவில்லை. ஆனால், முதல்வர் கருணாநிதி கலந்துகொள்கிறார்.
மேலும் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராம்விலாஸ் பாஸ்வான், தமிழக தலைவர்கள் வைகோ, ராமதாஸ், வாழப்பாடி ராமமூர்த்தி,ஆர்.எம்.வீரப்பன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டிற்கு முன்பாக கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்றார் திருநாவுக்கரசு.