சாலை விபத்தில் ஒரே குடும்பத்தின் 3 பேர் சாவு
கோவை:
கோவை அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூ-ன்று பேர் இறந்தனர்.
கோவை உடுமலைப் பேட்டையில் சுகுணா பிராய்லர்ஸ் நிறுவனத்தில் போக்குவரத்து துறை ஊழியராகப் பணியாற்றியவர் மருதமணி (35).
இவர் கோவை பாப்ப நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர். மருதமணி தனது மனைவி அமுதாவை (30) பைக்கில்அழைத்துக் கொண்டு கோவை வந்தார். அப்போது தனது 6 மாதக் குழந்தை ஹரிணியையும் எடுத்து வந்தனர்.
இருவரும் குள்ளக்கல்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர். இந்த இடத்தில் போலீஸ் செக் போஸ்ட்அமைக்கப்பட்டுள்ளது. மணல்கள் நிரப்பிய பேரல்களைக் கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த பஸ் பைக்மீது பலமாக மோதியது.
இதில் பைக்கில் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்தனர். மருதமணி அதே இடத்தில் இறந்தார். இவரதுமனைவி மற்றும் குழந்தையும் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications