கருணாநிதியைக் குறை கூற ஜெ. யார்? .. வாழப்பாடி
திருச்சி:
தமிழக முதல்வர் கருணாநிதி, தனக்கு எதிராக வன்முறையைத் தூண்டி விடுவதாகஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளதற்கு தமிழக ராஜீவ் காங்கிரஸ்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், யார் வன்முறையைத் தூண்டிவிடுவது என்று மக்களுக்குத் தெரியும். டான்சி வழக்கில் தீர்ப்பு வந்ததும்,தொண்டர்களைத் தூண்டி விட்டு பஸ்களை எரித்தவர் ஜெயலலிதா என்பதுமக்களுக்குத் தெரியும்.
தர்மபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ்சை எரித்தது, அதிலிருந்தமூன்று மாணவிகள் உயிரிழந்தது ஆகியவற்றிற்கு ஜெயலலிதாதான் காரணம் என்பதைமக்கள் மறந்து விடவில்லை. மக்கள மனதிலிருந்து அவை இன்னும் அகலவில்லை.
வன்முறையைத் தூண்டி விட்டு ஆரவரிக்கும் ஜெயலலிதா, கருணாநிதி குறித்துக் குறைகூற அருகதை இல்லை.
நாட்டில் அவசரகால நிலையைக் கொண்டு வந்ததற்காக மக்களிடம் மன்னிப்புகேட்டவர் இந்திரா காந்தி. அதேபோல, தான் செய்த தவறுகளுக்கு பொதுமக்களிடம்கேட்க இப்போதும் ஜெயலலிதாவுக்கு அவகாசம் உள்ளது. இந்திராவின் வழியைஜெயலலிதாவும் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் மக்களிடம் மன்னிப்புகிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ள தீர்ப்பின் மூலம் ஆறுஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஹைகோர்ட் அல்லதுசுப்ரீம் கோர்ட்டில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு டிஸ்மிஸ் செய்யப்பட்டால் மட்டுமேஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியும் என்றார் வாழப்பாடி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications