கன்னட திரையுலகத்தினர் பெங்களூரில் தர்ணா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி பெங்களூரில் கன்னட நடிகர், நடிகைகள் புதன்கிழமை தர்ணாபோராட்டம் நடத்துகின்றனர்.
நடிகர் ராஜ்குமார் மீட்பு தொடர்பாக கன்னடத் திரையுலகத்தினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது ராஜ்குமார் கடத்தப்பட்டு 94 நாட்கள் ஆகின்றன.
இந்த நிலையில் ராஜ்குமாரை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி கன்னட திரையுலக நடிகர், நடிகைகள்புதன்கிழமை பெங்களூரில் எம்.ஜி.சாலை காந்தி சிலை முன்பு தர்ணா நடத்துகின்றனர்.
நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது திரையுலகத்தினரும் தர்ணாவில் கலந்துகொள்வார்கள் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications