தைவான் விமான விபத்தில் 78 பேர் பலி
தைபே:
தைவானில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 78 பேர் இறந்தனர். 85 பேர் காயமடைந்தனர். 16 பேர்காயமின்றித் தப்பினர்.
தைவான் விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 747-400 போயிங் ரக விமானம் செவ்வாய்க்கிழமை, உள்ளூர் நேரப்படி இரவு 11.18 மணிக்குக்கிளம்பியது. விமானம் கிளம்பிய சில வினாடிகளில் கடும் சூறாவளிக்காற்று வீசியது. இதனால் நிலை தடுமாறிய விமானம், கிளம்பிய சில நொடிகளிலேயேவிமானம் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் 179 பேர் இருந்தனர். இவர்களில் 20 பேர் விமான ஊழியர்கள். விபத்து குறித்து விமான நிலைய துணை இயக்குநர் சங் கியோ செங் கூறுகையில்,பலத்த சூறாவளிக் காற்றால்தான் இவ்விபத்து ஏற்பட்டது என்றார்.
தைவான் பிரதமர் சங் சன் ஹிசைங் கூறுகையில், இது மிகவும் மோசமான விபத்து. சாவு எண்ணிக்கை 100 க்கும் மேல் உயரலாம் என்று அச்சம் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 22 பேர் அமெரிக்கர்கள் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. விபத்தில் இறந்த அனைவரது உடல்களும்மீட்கப்பட்டு விட்டன.












Click it and Unblock the Notifications