For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடரும் வன்முறை .. இலங்கை பங்கு வர்த்தகத்தில் சரிவு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் சண்டையால்,இலங்கை பங்குச் சந்தையில் வியாபாரம் குறைந்துள்ளது.

தொடக்கத்தில் 1.08 புள்ளிகளாக இருந்த மொத்த பங்குக் குறியீட்டு எண் சிறிது நேரத்தில்495.37 புள்ளிகளாக உயர்ந்தது. ஆனாலும், மொத்த பங்கு விற்பனை வழக்கத்தை விடமிகவும், அதுவும் செவ்வாய்க்கிழமை ஆன பங்கு விற்பனையை விட புதன்கிழமைமிகவும் குறைந்து காணப்பட்டது.

வழக்கமாக தினசரி ரூ. 1.6 கோடிக்கு பங்குகள் விற்பனை நடக்கும். ஆனால்,செவ்வாய்க்கிழமை 48 லட்சத்துக்குத் தான் விற்பனை இருந்தது. அதுவும் புதன்கிழமைவெகுவாகக் குறைந்துவிட்டது.

தோட்டப் பயிர்கள் தொடர்பான பங்குகள் இன்னும் சரி வர மார்க்கெட்டைப்பிடிக்காததால்தான் பங்கு விற்பனை மந்தமாக உள்ளதாக மார்க்கெட் வட்டாரங்கள்தெரிவித்தன.

மத்திய இலங்கையில்தான் தோட்டப் பயிர்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன. சிலநாட்களுக்கு முன் அங்கு நடந்த இனக் கலவரத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழர்கள். இதனால், பணியாளர்கள் பணிக்குவரவில்லை.

கடந்த சில நாட்களாக எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இப்போதுதான் அங்குநிலைமை சீரடைந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் தோட்டப் பயிர்கள் வியாபாரம்பெருகும்.

அவை தொடர்பாக பங்குகளின் விற்பனையும் அதிகரிக்கும். அதற்குப் பிறகு பங்குசந்தையில் வியாபாரம் உயரும் என்று எதிர்பார்ப்பதாக மார்க்கெட் வட்டாரங்கள்தெரிவித்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X