ஈழம்: பாஜகவின் கருத்தைக் கேட்கிறது மார்க்சிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை ஈழப் பிரச்சினையில் மதிமுகவின் நிலை குறித்து பாஜக தலைவர்கள் கருத்துதெரிவிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரிவுகேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலர் என். சங்கரய்யா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இலங்கை ஈழப் பிரச்சினை குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அக் கூட்டணியில்உறுப்பு நாடாக உள்ள ம.தி.மு.க.வும் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன.

இலங்கை இனப் பிரச்சினைக்கு ஒருங்கிணைந்த இலங்கைதான் ஒரே தீர்வு என்றுதேசிய ஜனநாயகக் கூட்டணி கூறுகிறது. ஆனால், சமீபத்தில் விடுதலைப் புலிகள்அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பாலசிங்கத்தைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் ஈழத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இலங்கையில் தனி ஈழம் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு கருத்தையும்,கூட்டணியில் உறுப்பு நாடான மதிமுக வேறு ஒரு கருத்தையும் கொண்டுள்ளன.

ஆகவே, இது குறித்து மக்களுக்கு சரியான விளக்கத்தை பாஜக தலைவர்கள்தெரிவிக்கவேண்டும் என்றார் சங்கரய்யா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+