பெங்களூரில் தமிழ் படம் திரையிட எதிர்ப்பு
பெங்களூர்:
கன்னட சினிமா தயாரிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரில்தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை நிறுத்த வேண்டும் என கன்னட சலுவாலிசமிதியைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டு பிணைக் கைதியாக உள்ளார்.ராஜ்குமார் கடத்தப்பட்ட பின்பு கன்னடப் படங்களின் படப்பிடிப்பு ரத்துசெய்யப்பட்டது. பிற மொழிப் படங்கள் திரையிடப்பட்டாலும் கூட தமிழ் படம்மட்டும் கன்னட பிற்போக்கு அமைப்புகளின் நெருக்குதல் காரணமாகதிரையிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தீபாவளி முதல் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன. தீபாவளிக்குத்தமிழ்ப் படங்களைத் திரையிட்டால் நல்ல வசூல் கிடைக்கும் என்பதால் தமிழ்ப்படங்களுக்கு "தற்காலிகமாக தடை நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் பெங்களூரில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவதை நிறுத்தவேண்டும் என கன்னட சலுவாலி சமிதியின் தலைவர் நாராயணகுமார் எச்சிரிக்கைவிடுத்துள்ளார்.
அவர் பெங்களூரில் செவ்வாய்க் கிழமையன்று கூறுகையில், ராஜ்குமார் கடத்தப்பட்டு90 நாட்களாகி விட்டன. அவர் கடத்தப்பட்டது முதல் கன்னட சினிமாத் தயாரிப்புப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெங்களூரில் தமிழ் சினிமாக்கள்திரையிடப்படுகின்றன. இதை உடனே நிறுத்த வேண்டும்.
நவம்பர் 1-ம் தேதி நள்ளிரவிற்குள் ராஜ்குமார் வரவில்லையென்றால் நவம்பர் 9-ம்தேதி முதல் தமிழக அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடக்கும்.
ராஜ்குமாரை கடத்தி வைத்துக் கொண்டு தமிழை இரண்டாவது ஆட்சி மொழியாக்கவேண்டும், காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு தரவேண்டும் என கேட்பது தவறானது.
ராஜ்குமாருக்கு எதிரான பிரச்சாரத்தில் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதைஅவர்கள் நிறுத்த வேண்டும். ராஜ்குமாரை மீட்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசும்முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையில் மெத்தனம் காட்டிக் கொண்டு, அவர் காட்டில்நலமுடன் இருக்கிறார் என முதல்வர் கிருஷ்ணா கூறுவது கன்டனத்திற்குரியது.
கர்நாடகாவில் 45 லட்சம் தமிழர்கள் இருப்பதால் வாக்குச் சீட்டை தமிழில் அச்சிடவேண்டும் என தேர்தல் கமிஷனிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல்கமிஷன் ஏற்கக்கூடாது. இங்கு 45 லட்சம் தமிழர்கள் இல்லை, குறைவாகவே உள்ளனர்என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications