ரேடியோ செய்தி நேரங்களில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அகில இந்திய ரேடியோவின் செய்தி நேரம் புதன் கிழமை முதல் மாற்றிஅமைக்கப்படுகிறது.
மாற்றம், புதன் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. புதிய நேரம் குறித்து அகில இந்தியவானொலி நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய செய்தி ஒலிபரப்பாகும்நேரங்கள் வருமாறு:
பிற்பகல் 2.10 மணிக்கு ஒலிபரப்பாகி வந்த தமிழ் செய்தி, சென்னை முதல் அலைவரிசைமற்றும் சிற்றலை வரிசைகளில் பிற்பகல் 1.55 மணிக்கு ஒலிபரப்பாகும். இதைதமிழகத்திலுள்ள அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்யும்.
பிற்பகல் 2 மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கிலச் செய்தி, அரை மணி நேரம்நீட்டிக்கப்படுகிறது. பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை, சென்னை இரண்டாவதுஅலை வரிசையில் இந்தி செய்தி ஒலிபரப்பாகும்.












Click it and Unblock the Notifications