For Daily Alerts
Just In
அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ஜெ. உதவி
சென்னை:
அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த விபத்தில் சிக்கி இறந்த தொண்டர்குடும்பத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ரூ. 50,000 நிவாரணத்தொகை கொடுத்துள்ளார்.
அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுகுறித்துக் கூறப்பட்டுள்ளதாவது:
கோவில்பட்டியில் நடந்த அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகஅருப்புக்கோட்டையிலிருந்து சண்முகம் என்ற தொண்டர் சென்றார். அப்போது அரசுபஸ் மோதி பலியானார்.
அவரது குடும்பத்திற்கு ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கட்சிக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் செல்லும்போது, மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார் என்று அறிக்கையில்கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, November 1, 2000, 5:30 [IST]