சிங்கப்பூர் விமான விபத்தில் இறந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

தைவான் தலைநகர் தைபே அருகே சிங்கப்பூர் விமானம் விபத்துக்குள்ளாகி இறந்த 78பேரில் 12 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

12 பேரில் 2 பேர் குழந்தைகள் என ஹைதராபாத்தில் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில்பயணம் செய்த மற்றொரு ஆந்திர பயணியான கொப்பகா சோமசேகரா வரபிரசாத்உயிர் தப்பினார்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் சதானந்தம் என்ற அதிகாரியின் தலைமையில்,தகவல் குழுவை ஆந்திர மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும் 7843710 அல்லது98480-44745 என்ற தொலைபேசி எண்களையும் தகவல் மையத்தில் அரசு ஏற்பாடுசெய்துள்ளது. விபத்து குறித்த தகவல்களை இந்த தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இறந்த ஆந்திர பயணிகள் விவரம்: முகம்மது, முனவர் கான், நூர்ஜஹான் பேகம், அலிநியாஸி ரூபியா, கொம்மரா ஸ்னேஹா, கொம்மரா சாதில் (குழந்தை), கொம்மராசங்கீதா, கொம்மரா ஸ்ரீனிவாஸ், மரலியாபுடி சூர்யநாராயணா, வுப்பலா நீலிமா,வோலம் பிரசாத் (குழந்தை), வோலம் ஜனார்தனன்.

இறந்தவர்களின் உறவினர்கள் சென்னை வழியாக சிங்கப்பூருக்குப்பயணமாகியுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+