சிங்கப்பூர் விமான விபத்தில் இறந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள்
ஹைதராபாத்:
தைவான் தலைநகர் தைபே அருகே சிங்கப்பூர் விமானம் விபத்துக்குள்ளாகி இறந்த 78பேரில் 12 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
12 பேரில் 2 பேர் குழந்தைகள் என ஹைதராபாத்தில் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில்பயணம் செய்த மற்றொரு ஆந்திர பயணியான கொப்பகா சோமசேகரா வரபிரசாத்உயிர் தப்பினார்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் சதானந்தம் என்ற அதிகாரியின் தலைமையில்,தகவல் குழுவை ஆந்திர மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும் 7843710 அல்லது98480-44745 என்ற தொலைபேசி எண்களையும் தகவல் மையத்தில் அரசு ஏற்பாடுசெய்துள்ளது. விபத்து குறித்த தகவல்களை இந்த தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இறந்த ஆந்திர பயணிகள் விவரம்: முகம்மது, முனவர் கான், நூர்ஜஹான் பேகம், அலிநியாஸி ரூபியா, கொம்மரா ஸ்னேஹா, கொம்மரா சாதில் (குழந்தை), கொம்மராசங்கீதா, கொம்மரா ஸ்ரீனிவாஸ், மரலியாபுடி சூர்யநாராயணா, வுப்பலா நீலிமா,வோலம் பிரசாத் (குழந்தை), வோலம் ஜனார்தனன்.
இறந்தவர்களின் உறவினர்கள் சென்னை வழியாக சிங்கப்பூருக்குப்பயணமாகியுள்ளனர்.
யு.என்.ஐ.