For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவினருக்குக் கருப்புக் கொடி .. அதிமுகவினர் கைது

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில், ஜெயலலிதாவைக் கண்டித்து, திமுக தொண்டர்கள் நடத்திய ஊர்வலத்தில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற 132 அதிமுகதொண்டர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் பாண்டிச்சேரி அதிமுக மாநில செயலாளர் ரவீந்திரனும், 13 பெண்களும் அடங்குவர். சமீபத்தில் சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசுகையில், தமிழகத்தில் அடுத்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் கருணாநிதியை ஜெயலுக்குஅனுப்புவோம் என்று பேசினார்.

ஜெயலலிதாவின் பேச்சைக் கண்டித்துப் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் திமுக சார்பில் கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. பாண்டிச்சேரியில் நடந்த திமுகபேரணியின்போது, அதிமுக தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டி தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.

இயைடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X