டைரக்ட் டூ ஹோம் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி:
ஒலிபரப்புத் துறையில், புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வர உதவும் என்றுஎதிர்பார்க்கப்படும் டைரக்ட் டூ ஹோம் (டி.டி.எச்) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைவியாழக்கிழமை ஒப்புதல் கொடுத்தது.
டி.டி.எச். திட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தலைமையிலானஎட்டு அமைச்சர்கள் கொண்ட குழு ஆய்வு செய்தது. அதன் இறுதியில், திட்டத்திற்குஅனுமதி வழங்கலாம் என்று முடிவு செய்தது. இதையடுத்து டி.டி.எச். திட்டத்திற்குமத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டி.டி.எச். திட்டத்தின் மூலம் சாட்டிலைட் டி.வி சானல் ஏதாவது ஒன்றைப் பார்க்கவிரும்பும் நேயர், கேபிள் டிவி. ஆபரேட்டரை சார்ந்திருக்கத் தேவையில்லை. சிறியஅளவிலான டிஷ் ஆன்டனாவை வைத்துக் கொண்டு 100-க்கும் மேற்பட்ட சாட்டிலைட்சானல்களைப் பார்க்க முடியும்.
கேபிள் ஆபரேட்டர்களால் நுழைய முடியாத கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிமக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் திட்டமாகும் இது.
தரமான ஒளி, ஒலி பரப்பு உள்பட பல வசதிகளும் இந்தத் திட்டத்தின் மூலம்நேயர்களுக்குக் கிடைக்கும். இன்டர்நெட் வசதி, ஈ மெயில் வசதி, வீட்டிலிருந்தேஷாப்பிங் செய்வது, வங்கிப் பரிவர்த்தனை, கல்வி ஆகிய வசதிகளும் டி.டி.எச்.திட்டத்தின் கீழ் நேயர்களுக்குக் கிடைக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இருப்பினும் பலகாரணங்களால் அதறகு ஒப்புதல் கிடைக்கவில்லை. அப்போது பிரமோத் மகாஜன்மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார்.
அத்வானி தலைமையிலான ஆய்வுக் குழுவில், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா,பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர்சுஷ்மா வராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், தகவல்தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், விண்வெளித் துறை அமைச்சர்வசுந்தரா ராஜே சிந்தியா, சட்டத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரும்இடம்பெற்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications