மகாத்மாவை நினைவு கூர்ந்தது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திங்கள் கிழமை தமிழகம் முழுவதும் அவரது சிலைக்குதலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் காந்தி சிலைக்கு கவர்னர் பாத்திமா பீவி மாலை அணிவித்தார். பின்னர்ஐ.நா. உருவாக்கிய அமைதிக்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.
அனைத்து தரப்பு மக்களிடையேயும் அன்பையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதேஇதன் நோக்கம். ஐ.நாவின் யுனெஸ்கோ இந்த ஒப்பந்த்ததை ஏற்படுத்தியுள்ளது.அமைதி ஒப்பந்தத்தில் தூத்துக்குடியில் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தியமுதல்வர் கருணாநதி கையெழுத்திட்டார்.
சென்னை கடற்கரையிலும், காந்தி மண்டபத்திலும் நடந்த காந்தி ஜெயந்திநிகழ்ச்சிகளில் கவர்னர் பாத்திமா பீவி கலந்து கொண்டார்.
சென்னை மேயர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டனர்.












Click it and Unblock the Notifications