குளோரின் வாயு கசிவு.. 330 பேர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

உடுமலைப் பேட்டை அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயுகசிவால் 330 பேர் பாதிப்படைந்தனர்.

கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டையில் தாராபுரம் ரோட்டில் ஒரு தனியார்தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வேதிப் பொருட்கள்தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.

இங்கு நவம்பர் 1-ம் தேதி திடீரென குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. இந்தக் கசிவால்பலருக்கு கண் எரிச்சல் உண்டானது. சிலருக்கு வாந்தி ஏற்பட்டது. மேலும் பலர்மயக்கமடைந்தனர். இவர்கள் உட்பட 330 பேர் வாயு கசிவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 330 பேரும் உடுமலைப் பேட்டை அரசுமருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு இங்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் இந்த நோயாளிகளுக்கு உதவ, தனியார் மருத்துவமனையில்உள்ள டாக்டர்கள் அனைவரும் விரைந்து வந்தனர். சிகிச்சைக்கு பின்னர் அனைவரும்வீடு திரும்பினர்.

மாவட்ட கலெக்டர் சந்தானம் நேரில் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளதாசில்தாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தாசில்தார், வாயு உற்பத்தியை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+